கன்னியாகுமரி: தொழிலதிபரை தாக்கிவிட்டு 200 சவரன் நகைகளை திருடிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே தொழிலதிபரின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், அவரை கடுமையாக தாக்கிவிட்டு 200 சவரன் நகைகளை திருடிச் சென்றனர்.
தொழிலதிபர் மோகன்தாஸ் மற்றும் அவரது வீடு
தொழிலதிபர் மோகன்தாஸ் மற்றும் அவரது வீடுpt desk
Published on

கன்னியாகுமரியின் வீயனூரைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர், பெட்ரோல் பங்க் மற்றும் நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது மனைவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தனது இரண்டாவது மகள் அக்சயாவுடன், மோகன்தாஸ் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இரவு நேரத்தில் புகுந்த இரண்டு முகமூடி கொள்ளையர்கள், அவரது தலையில் இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர்.

Police
Policejpt desk

இதில் அவர் பலத்தகாயமடைந்த நிலையில், அக்சயா கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய நபர்கள், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 200 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பினர். இதனால் பதற்றமடைந்த அக்சயா, படுகாயமடைந்த தனது தந்தையை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

தொழிலதிபர் மோகன்தாஸ் மற்றும் அவரது வீடு
பெங்களூரு| வேட்டி கட்டியவருக்கு அனுமதி மறுப்பு.. தனக்கேற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்த பிரபல தொழிலதிபர்!

சம்பவம் நிகழ்ந்த இடத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com