சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல் 

சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல் 

சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல் 
Published on

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்தில் அவரது குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் ஓடி ஒளிய முடியாது. பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்களே அதனை ஒழிப்பார்கள். பேனர் கலாசாரத்தை ஒழிக்க மக்களுடன் மக்கள் நீதி மய்யமும் துணை நிற்கும்.” எனத் தெரிவித்தார். 

முன்னதாக, சென்னைப் பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com