திருச்சி நகை வியாபாரி சென்னையில் உயிரிழப்பு: வழிப்பறி கொள்ளை?

திருச்சி நகை வியாபாரி சென்னையில் உயிரிழப்பு: வழிப்பறி கொள்ளை?
திருச்சி நகை வியாபாரி சென்னையில் உயிரிழப்பு: வழிப்பறி கொள்ளை?
Published on

திருச்சியைச் சேர்ந்த நகை வியாபாரி சென்னை வேப்பேரியில், வழிப்பறிக் கொள்ளையின் போது நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த நகை வியாபாரி ரங்கராஜன். வாரத்திற்கு இருமுறை சென்னை சவுகார்பேட்டையில் வாடிக்கையாளர்களிடம் தங்கம் வாங்கிச் சென்று நகையாக மாற்றித் திருப்பி அளித்து வரும் தொழில் செய்து வந்தார். அதேபோல் நேற்று சென்னை வந்த அவர், வேப்பேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ஆனால், அவரிடம் இருந்த அரைக் கிலோ தங்கத்தை வழிப்பறி செய்தவர்களை துரத்திச் செல்லும்போது சாலையில் தடுமாறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேப்பேரி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சவுகார்பேட்டையில் தங்கம் வாங்கியதாகக் கூறப்படும் நபரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. வேப்பேரி பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com