முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்

முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்
முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்
Published on

7வது ஊதியக் குழுவின், அலுவலர் குழு அறிக்கை தாக்கல் செய்ததற்காக முதல்வரை சந்தித்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று சந்தித்தனர். ஏழாவது ஊதியக் குழுவின், அலுவலர் குழு அறிக்கை தாக்கல் செய்ததற்காக, முதலமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன்‌, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன், தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கணேசன் உள்ளிட்டோர், முதலமைச்சர் பழனிசாமியை, முகாம் அலுவலகத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com