செய்யது பீடி நிறுவனம் ரூ.161.56 கோடி வரி ஏய்ப்பு

செய்யது பீடி நிறுவனம் ரூ.161.56 கோடி வரி ஏய்ப்பு
செய்யது பீடி நிறுவனம் ரூ.161.56 கோடி வரி ஏய்ப்பு
Published on

செய்யது பீடி நிறுவனம் ரூ.161.56 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக, வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.5.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. செய்யது பீடி தலைமை அலுவலகம் அமைந்துள்ள நெல்லை வண்ணாரப்பேட்டை அலுவலகம் உள்ளிட்ட அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 63 இடங்களில் வருமான 
வரித்துறை சோதனை நடத்தியிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com