மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் தூக்கிட்டு தற்கொலை !

மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் தூக்கிட்டு தற்கொலை !
மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் தூக்கிட்டு தற்கொலை !
Published on

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் மனவியை வெட்டி கொலை செய்து விட்டு கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பபத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் முருகன்-சின்னபாப்பா தம்பதியினர். கூலி தொழிலாளி இவர்களுக்கு 10 வருங்களுக்கு முன்பு திருமணம் நடந்து இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவா் முருகன் தனது மனைவி சின்னபாப்பாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து, தொந்தரவு செய்து குடும்ப தகராறில் அடிக்கடி ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சின்னபாப்பா பல மாதங்களாக அவருடைய அம்மா வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் கணவா் முருகன் தனது மனைவி சின்னபாப்பாவிடம் இனி நல்லமுறையில் நடந்து கொள்ளவதாக கூறி அவருடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து வழக்கம் போல இன்றும் கணவா் முருகன் தனது மனைவி சின்னபாப்பாவிடம் தகராறு செய்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணவா் முருகன் தனது வீட்டில் இருந்த கத்தியால் மனைவி சின்னபாப்பாயை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சின்னபாப்பா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் முருகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரிசிலாப்பட்டு காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com