மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது

மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது
மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது
Published on

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே குடும்ப தகராறில் மனவியை வெட்டி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடி அருகே கடுகுச்சந்தை சத்திரம் பகுதியை சோ்ந்தவர்கள் குருசாமி(65)- அழகுவள்ளி(60) தம்பதியினர். இவா்களுக்கு  மாரிஸ்வரி(30) என்ற மகளும் உள்ளார். அவர் திருமணமாகி தனது கணவருடன் ராமநாதபுரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கணவா் குருசாமி தனது மனைவி அழகு வள்ளியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து, தினந்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியை தொந்தரவு செய்து குடும்ப தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வழக்கம் போல இன்றும் கணவா் குருசாமி தனது மனைவி அழகுவள்ளியிடம் தகராறு செய்து வாக்கு வாதத்தில்  ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணவா் குருசாமி தனது வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி அழகு வள்ளியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அழகுவள்ளி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாயல்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவா் குருசாமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com