ஓசூர் சட்டப்பேரவை தொகுதி காலியென அறிவிப்பு

ஓசூர் சட்டப்பேரவை தொகுதி காலியென அறிவிப்பு
ஓசூர் சட்டப்பேரவை தொகுதி காலியென அறிவிப்பு
Published on

ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1998-ஆம் ஆண்டில், ஓசூர் அருகே நடந்த போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சமீபத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்த பாலகிருஷ்ண ரெட்டி, சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்துச் செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

இதனையடுத்து சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் ஓசூர் சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை செயலளர் சீனிவாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் 21 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com