வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்பு
கனமழை பெய்ய வாய்ப்புபுதிய தலைமுறை
Published on

தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என்றும், இது வடகிழக்குத் திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் 24-ஆம் தேதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தென்தமிழக கடலோரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்பு
Woooww..!! வானில் நிகழ்ந்த அதிசயம்.. இரவை பகலாக்கிய விண்கல்! மிரண்டு பார்த்த மக்கள்! எங்கே தெரியுமா?

குறிப்பாக, தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com