சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா
சென்னை உயர்நீதிமன்றம், ஈஷாpt web

"மகளுக்கு திருமணம்.. மற்றவர்கள் சன்னியாசிகளா?" - ஈஷா மையத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் கேள்வி

கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Published on

செய்தியாளர் சுப்பையா

மகள்கள் வேண்டி ஆட்கொணர்வு மனு

கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர். எஸ் காமராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், “எனது இரண்டு மகள்களான கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ள சென்றவர்கள், அங்கேயே தங்கி விட்டனர்.

ஈஷா யோகா
ஈஷா யோகாPT

இது தொடர்பாக ஏற்கனவே ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தபோது, சென்னை உயர்நீதிமன்றம், கோவை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில், இருவரும் சில நாட்கள் வெளி இடத்தில் தங்கி இருக்க வேண்டும்; அதன்பின் மனநிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா
முக்கிய செய்தி|அக். மாதத்தில் 15நாட்கள் வங்கிகள் விடுமுறை; எந்த மாநிலம்,எந்தெந்த தேதிகள்? முழுவிபரம்

மகள்கள் மூலமே நிர்பந்தம்

தொடர்ந்து, “எங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று மகள்கள் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் காரணமாக நானும் எனது மனைவியும் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனது மகள்கள் தனி அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுவதாக தெரிய வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஈஷா யோகா மையத்துக்கு எதிராக தான் எந்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும், அப்படி செய்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என இரண்டாவது மகள் மூலம் நிர்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “எனது மகள்கள் ஈஷா யோகா மையத்திலிருந்து வெளிவந்தால் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம். அவர்களுக்கென தனி இடத்தை கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும். எனவே, இரு மகள்களை மீட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா
"இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு.." - மெய்யழகன் படத்தில் சில நிமிடங்களில் குறைப்பு

ஈஷா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் உள்ளன?

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மகள்கள் இருவரும் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெற்றோர்கள் தங்களை கேவலப்படுத்துவதாக மகள்கள் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நீங்கள் முற்றும் துணிந்த ஞானிகளான பின் அதை ஏன் பொருட்படுத்துகிறீர்கள்” என்று கேட்டனர். ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படத்தைப் பார்த்த நீதிபதிகள், மகளுக்கு திருமணம் செய்துவிட்டு இவர்களை சன்னியாசிகளை ஆக்குவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “நாங்கள் யாருக்கும் எதிராகவும் இல்லை ஆதரவாகவும் இல்லை. இதுகுறித்து பல சந்தேகங்கள் உள்ளது” என தெரிவித்தனர். பின்னர் ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்ற விவரத்தை வரும் நான்காம் தேதி காவல்துறை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா
தமிழக அமைச்சர்கள் எத்தனைபேர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன? - உச்சநீதிமன்றம் கேள்வி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com