தூய்மை இந்தியா திட்டம்: மாணவர்களுடன் இணைந்து காந்தி மண்டபத்தை சுத்தம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி

காந்தி மண்டபத்தில் காலி மது பாட்டில்கள் இருப்பது தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
காந்தி மண்டபத்தை சுத்தம் செய்யும் ஆர்.என்.ரவி
காந்தி மண்டபத்தை சுத்தம் செய்யும் ஆர்.என்.ரவிஎக்ஸ் தளம்
Published on

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டபத்தை ஆளுநர் இன்று சுத்தம் செய்தார்.

காந்தி மண்டபத்தை சுத்தம் செய்யும் ஆர்.என்.ரவி
காந்தி மண்டபத்தை சுத்தம் செய்யும் ஆர்.என்.ரவி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவர்களுடன் இணைந்து இந்த பணியில் ஆளுநர் ஈடுபட்டார். கையில் பக்கெட்டுடன் காந்தி மண்டபத்தில் கிடந்த குப்பைகளை அவர் சேகரித்தார்.

2014ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை நினைவுகூரும் வகையில் காந்தி சிலையையும் ஆளுநர் தூய்மைப்படுத்தினார். அந்த பணியின் போது சில மது பாட்டில்கள் கிடந்ததாகவும், அது காந்தி கொள்கைகளுக்கு எதிரானது என்றும் ஆளுநர் ஆதங்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com