“தவறான விளக்கத்தால் நம் அடிப்படை பாடத்திட்டம் மாறிவிட்டது” - ஆர்.என்.ரவி

“ஆன்மீகமும் கல்வியோடு இருந்த நிலையில் தவறான விளக்கத்தை சொல்லிக்கொடுத்து அரசியல் சூழல் நம் அடிப்படை பாடத்திட்டத்தை மாற்றிவிட்டது. இதனால் நாம் சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் போல உள்ளோம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவிTwitter
Published on

செய்தியாளர் - மணிகண்டபிரபு

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராசர் கலை கல்லூரியில் கருமுத்து தியாகராச செட்டியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் தின விழா மற்றும் கருமுத்து கண்ணன் நினைவு திருவாசகம் ஒப்புவித்தல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் இன்று நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து சிறப்பாக திருவாசகம் பாடி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாட வைத்து அதனை கேட்டு ரசித்தார். இதனைத்தொடர்ந்து விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில்,

ஆளுநர் ஆர்.என்.ரவி  பங்கேற்ற திருவாசகம் பாடும் நிகழ்வு
ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற திருவாசகம் பாடும் நிகழ்வு

“இளம்தலைமுறையினர் திருவாசகம் படிப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் திட்டமிட்டு பிரித்தனர். நம்மை நமது பண்பாடு, கல்வி, ஆன்மீகம், வாழ்க்கை முறைகளில் பின்தங்க செய்தனர். வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தேவை இப்போது உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகளில் போலியான பேராசிரியர்கள் கல்வி கற்று கொடுத்து வருகின்றனர்.

பல கல்லூரிகளில் பணம் மட்டுமே முக்கியம் என்ற நிலை உள்ளது. இன்று பெருமளவில் வணிக நோக்கத்திற்காக கல்வியை கற்பிக்கும் நிலை உள்ளது. தமிழகத்தில் ஒரு பேராசிரியர் 30 கல்லூரிகளுக்கு பாடம் நடத்துகிறார். இப்படி போலியான பேராசிரியர்கள் பொறியாளர்களுக்கு பாடம் நடத்துவது அதிர்ச்சி தருகிறது. இன்றைய காலகட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் வணிகநோக்கத்திலயே தொடங்கப்படுகிறது.

ஆர்.என்.ரவி
ஒரே நேரத்தில் 32 கல்லூரிகளில் பணி செய்த ஒரே பேராசிரியர்! அம்பலமான பகீர் முறைகேடு - நடவடிக்கை பாயுமா?

தமிழகம்தான் ஆன்மீகத்தின் தலைநகரமாக பாரத நாட்டிற்கு இருந்தது. தலைசிறந்த ஆன்மீகவாதிகள் தமிழ் மண்ணில் தோன்றியவர்கள். தமிழக மண்ணில் இருந்துதான் பக்தி இலக்கியங்கள் வந்ததாக நான் படித்துள்ளேன். தமிழகத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் திருமறை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை உருவாக்கி பக்தி இயக்கத்தை வளர்த்தவர்கள்.

திராவிடமண்ணில் இருந்துதான் பல பக்தி இலக்கியங்கள் உருவாகின. இந்த திராவிட மண்ணில் இருந்துதான் நம் பக்தி இலக்கியம் தொடங்கி நாடு முழுவதும் சென்றடைந்துள்ளது. திருமுறை நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவை கல்வி பயிலாதவர்களுக்கும் பக்தி இயக்கத்தை எடுத்துக்காட்டியது.

ஆவண காப்பகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக நாடு முழுவதும் திருவாசகம் போன்றவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதன்பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியில் அது அழிக்கப்பட்டு உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பாக நம் நாடு உயர்கல்வி, பொருளாதாரத்தில் உலகின் முதன்மையாக இருந்தது.

ஆர்.என்.ரவி
“சனாதன தர்மம் இன்றி பாரத நாட்டை கற்பனையாகக் கூட நினைத்துப் பார்க்க முடியாது” - ஆளுநர் ஆர்.என்.ரவி

இப்போது நம் தேசம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது. திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்கள் நம்மை மேம்படுத்தும். தமிழகத்தில் அரசின் பங்கு இல்லாமலே நல்ல மக்களால் பல்வேறு பல்கலைகழகங்கள் உருவாக்கப்பட்டு ஏழைகளுக்கு உயர்கல்வி கிடைத்தது.

சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்கள் சமூகத்தையும், நாட்டையும் மேம்படுத்த நினைப்பார்கள்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிபுதிய தலைமுறை

திருவாசகம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்கள் தொடர்பான பாடங்கள் பள்ளி கல்லூரிகளில் இடம்பெற வேண்டும். நான் சாப்பாடு இல்லாமல் பகவத்கீதையில் உள்ள பல ஸ்லோகங்களை நான் படித்துள்ளேன். நமக்கு ஆரம்பக்கல்விகளில் நிலையான பாடத்திட்டம் இல்லை. எனவே திருவாசகம் போன்றவற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்

ஆர்.என்.ரவி
“சுதந்திரத்திற்காக உயிர் நீத்த வீரர்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டு வருகிறது” - ஆளுநர் ஆர்.என்.ரவி

கல்வியோடு சேர்ந்து பக்தி இலக்கியங்களும் இருக்க வேண்டும். அதுதான் வேர். ஆனால் அந்த வேர் அறுக்கப்பட்டுள்ளது, ஆன்மீகமும் கல்வியோடு இருந்த நிலையில் தவறான விளக்கத்தை சொல்லிக்கொடுத்து அரசியல் சூழல் நம் அடிப்படை பாடத்திட்டத்தை மாற்றிவிட்டது. இதனால் நாம் சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் போல உள்ளோம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவிpt web

மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் போன்றவற்றின் முக்கியத்துவத்தை நம் தலைமுறைக்கு சொல்லித்தரவில்லை, சிறிய பிள்ளைகளுக்கு நமது கலாச்சாரத்தையும், பக்தி இலக்கியங்களோடு கல்வியையும் சேர்த்து கற்றுத்தர வேண்டும். வரும் 25 ஆண்டுகளில் இந்தியா மேலும் வளர்ச்சியடைய உள்ளது. அறிவியல் தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளச்சியை பெற உள்ளோம். எழுத்தறிவின்மையே இல்லாமல், உலகின் முதன்மை நாடாக இந்தியா இருக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com