விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு ஆளுநர், முதலமைச்சர் பாராட்டு

திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
விமானிகளுக்கு ஆளுநர், முதலமைச்சர் பாராட்டு
விமானிகளுக்கு ஆளுநர், முதலமைச்சர் பாராட்டுpt desk
Published on

விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, இக்கட்டான நேரத்தில் துணிச்சலாகவும், பதற்றமின்றியும் விமானிகள் செயல்பட்டதாக கூறியுள்ளார்.

Governor RN Ravi
Governor RN RaviRaj Bhavan twitter

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ஏர் இந்தியா விமானம் தரை இறங்குவதில் பிரச்னை என கேள்விபட்டதும், தொலைபேசி மூலம் அதிகாரிகளை ஒன்றிணைத்து தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தியதாக கூறியுள்ளார்.

விமானிகளுக்கு ஆளுநர், முதலமைச்சர் பாராட்டு
144 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிகள் Iqrom Rifadly Fahmi Zainal, Maitryee Shrikrishna Shitole!

தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்வதற்கு உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு தனது பாராட்டுகள் என்றும் கூறியுள்ளார்.

eps, cm stalin
eps, cm stalinpt web

இதேபோல், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ச்சியுற்றேன் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடுமையான நேரத்தில் திறம்பட செயல்பட்ட விமானிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்றும், எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com