ராட்சத ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் தலை - விளையாட்டு பூங்காவில் நேர்ந்த விபரீதம்..!

ராட்சத ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் தலை - விளையாட்டு பூங்காவில் நேர்ந்த விபரீதம்..!
ராட்சத ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் தலை - விளையாட்டு பூங்காவில் நேர்ந்த விபரீதம்..!
Published on

தனியார் விளையாட்டுப் பூங்காவில் உள்ள ராட்சத ராட்டினத்தில் சிறுமியின் தலை சிக்கிக் கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபத்தான நேரத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடாமல், தப்பிச் சென்ற ஆப்பரேட்டரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் செயல்பட்டு வரும் தனியார் விளையாட்டுப் பூங்காவில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு சென்ற கேரளாவைச் சேர்ந்த சல்மா என்ற சிறுமி, ராட்சத ராட்டினத்தில் ஏறியுள்ளார். ராட்டினம் சுற்றத் தொடங்கியபோது எதிர்பாராத விதமாக சிறுமியின் தலை பக்கவாட்டு கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் பதற்றமடைந்த ராட்டினத்தின் ஆப்பரேட்டர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அமிர்தா - சம்பவத்தை பார்த்த பெண் 

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சாஸ்திரி நகர் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். விளையாட்டு பூங்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புகார் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com