திருச்சி: நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

திருச்சி அருகே நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தைpt desk
Published on

செய்தியாளர்: நிக்சன்

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பெரிய குடந்துறை பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி (20) என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து முசிறி அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக இவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தைpt desk

தகவல் அறிந்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் புனிதா, டிரைவர் பாலமுருகன் ஆகியோர் கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக் கொண்டு முசிறி அரசு மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, கர்ப்பிணி ஜெயந்திக்கு வலி அதிகரிக்கவே ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு மருத்துவ உதவியாளர் புனிதா, ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ஜெயந்திக்கு பிரசவம் பார்த்தார்.

ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகை சாக்ஷி அகர்வால் சுவாமி தரிசனம்

இந்த பிரசவத்தில் ஜெயந்திக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதனைத்தொடர்ந்து தாயும் சேயும் மேல் சிகிச்சைக்கு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com