ட்விட்டரில் உதவி கேட்டவருக்கு விரைந்து உதவிய அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

ட்விட்டரில் உதவி கேட்டவருக்கு விரைந்து உதவிய அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
ட்விட்டரில் உதவி கேட்டவருக்கு விரைந்து உதவிய அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
Published on
அவசரமாக அமெரிக்கா செல்ல வேண்டுமென ட்விட்டரில் உதவி கேட்டவருக்கு அவசர பயண அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளார் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்.
ஜெர்மனியில் வசிக்கும் ஜோசபின் ரம்யா என்பவர் ட்விட்டரில் அவசர உதவி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், தனது தோழியின் சகோதரி அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் இறந்து விட்டதால் அவரின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அவசரமாக அமெரிக்கா செல்ல வேண்டுமென உதவி வேண்டி, தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தானின் ட்விட்டர் ஐடியை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து உடனடியாக அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், அந்தப் பெற்றோரின் விபரங்களை பெற்று இந்திய தூதரகத்திற்கு அனுப்பி, அவர்கள் அமெரிக்கா செல்வதற்கான அவசர பயண அனுமதியை பெற்றுக் கொடுத்தார். அமைச்சரின் உடனடி நடவடிக்கைக்கு ஜோசபின் ரம்யா மற்றும் உதவி தேவைப்பட்ட அந்த பெண்ணின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com