தலைப்புச்செய்திகள்|10 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி வரை

இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்தியாக பாா.க்க்கலாம்
CP Radhakrishnan  India team
CP Radhakrishnan India teampt desk
Published on

10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு. புதுச்சேரி துணைநிலை ஆளுநராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாஷ்நாதன் நியமனம்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி. நியூசிலாந்து அணியை இறுதி
நிமிடத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி.

joe biden, kamala harris
joe biden, kamala harrisPT

சென்னையில் மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்து உடலை அடையாற்றில் வீசிய தம்பதி கைது. நகைக்கு ஆசைப்பட்டு அருகாமை வீட்டில் வசித்து வந்தவரை கொன்ற
கொடூரம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வமாக போட்டியிடுகிறார் கமலா ஹாரிஸ். ஒவ்வொரு வாக்கினை பெறுவதற்கும் கடுமையாக உழைப்பேன் என
திட்டவட்டம்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி. 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி,
சூர்யகுமார் யாதவ் படை அசத்தல்.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், ஓரிரு நாட்களில்
முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Selvaperunthagai
Selvaperunthagaipt

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - கார்த்தி சிதம்பரம் இடையிலான வார்த்தை மோதல். மாநில காங்கிரஸ் கமிட்டியில் ஒரு பிரச்னையும் இல்லை என செல்வப் பெருந்தகை, தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையம் -கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் திட்டம். 22 மாதங்களாக மத்திய அரசின்
ஒப்புதலுக்கு காத்திருக்கும் தமிழக அரசு.

தருமபுரியில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த விவகாரம். இடைத்தரகராக செயல்பட்ட அரசு மருத்துவமனை செவிலியர் பணியிடை நீக்கம்.

மத்திய சீனாவை தாக்கிய கெய்மி புயலால் 6 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு,
நிவாரண பணிகள் தீவிரம்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிpt web

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலில் 10 பேர்
உயிரிழப்பு. லெபனான் மீது இஸ்ரேல் ராணுவத்தின் பதில் தாக்குதலால் பதற்றம்.

நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறிய நிலையில் அவர் கூறுவது முற்றிலும் தவறானது என மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநில அரசு ஒத்துழைத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு-கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம்
அலைமோதியது.

metro rail
metro railpt desk

சென்னை புறநகர் பகுதிகளில் போலி நகைகளை தங்கம் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் ஆப்பூரில் கைது செய்யப்பட்ட நிலையில், மோசடியில் ஈடுப்பட்ட முக்கிய நபர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com