அடையாற்றங் கரையோர மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

அடையாற்றங் கரையோர மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்
அடையாற்றங் கரையோர மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்
Published on

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படவுள்ளதால் அடையாற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடையாற்றங் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com