கொரோனா : திருச்சியில் முதல் உயிரிழப்பு

கொரோனா : திருச்சியில் முதல் உயிரிழப்பு
கொரோனா : திருச்சியில் முதல் உயிரிழப்பு
Published on

திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சியில் இதுவே கொரோனாவால் ஏற்படும் முதல் உயிரிழப்பு ஆகும்.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண்மணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு கடந்த 27-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஏற்கெனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போது உயிரிழந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com