சென்னையில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர் உயிரிழப்பு; 32 பேர் காயம்

சென்னையில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர் உயிரிழப்பு; 32 பேர் காயம்
சென்னையில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர் உயிரிழப்பு; 32 பேர் காயம்
Published on

சென்னை கொடுங்கையூரில் உள்ள பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

கொடுங்கையூர் மீனாம்பாள்‌ சாலையிலுள்ள ஒரு பேக்கரியில் நேற்றிரவு 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கடை மூடப்பட்டிருந்ததால் தீயை அணைப்பதற்காக ஷட்டரை திறக்கும் போது தீ ஜுவாலைகள் தாக்கியதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து, தீயை கட்டுப்படுத்த முயன்ற போது, பேக்கரியிலிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்தது. அதில், தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மட்டுமின்றி சாலையில் நடந்து சென்ற மக்களும் காயமடைந்தனர்.

பலத்த காயமடைந்த 4 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஏகராஜ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மேலும், 80 சதவிகித தீக்காயங்களுடன் உள்ள இருவருக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 32 பேருக்கு கீழ்ப்பாக்கம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com