டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு | ஒரே மையத்தில் தேர்வெழுதிய தந்தை, மகள்!

டின்பிஎஸ்சி நடத்தும் குரூப்-2 எழுத்துத் தேர்வானது இன்று நடைபெற்ற நிலையில், தந்தையும் மகளும் சேர்ந்து தேர்வெழுதிய சுவாரசியம் நடந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர், வணிக வரி துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 2,327 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த குரூப்-2 எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

அரசு வேலை மீதான ஆர்வத்தில் 50 வயதைக் கடந்த ஒரு வேதியியல் ஆசிரியர், 20 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கிறார். இப்போது அவரது மகளும் இதில் சேர்ந்து கொண்டார். தந்தையும், மகளுமாக ஒரே
மையத்தில் தேர்வு எழுதிய சுவாரஸ்யம் திருச்சியில் நடைபெற்றது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com