தந்தை மீது டிராக்டரை ஏற்றி கொன்ற மகன்..!

தந்தை மீது டிராக்டரை ஏற்றி கொன்ற மகன்..!
தந்தை மீது டிராக்டரை ஏற்றி கொன்ற மகன்..!
Published on

பெற்ற மகனே தந்தையின் மீது டிராக்டரை ஏற்றிக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முருகம்பாக்கம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (75).  இவருக்கு மூன்று மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவருக்கு கிராமத்தில் சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார். இவருடைய சொத்தை பாகப்பிரிவினை செய்து மகள்களுக்கு மூன்று பேருக்கும் மூன்று ஏக்கர் வீதம், இரண்டு மகன்களுக்கு தலா 3 ஏக்கர் வீதம் பாகப்பிரிவு செய்து வைத்திருந்தார்.

இவரது இரண்டு மகன்களில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். ஆகவே இவருடைய சொத்தை இவர் இறப்புக்குப் பிறகு ஏழுமலை எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக பாகப்பிரிவினை அண்ணாமலை செய்திருந்தார். இந்தச் சொத்துக்கள் அனைத்தும் பாட்டன் வழி சொத்தாகும். ஆகவே இதனை ஏன் மகள்களுக்கு கொடுத்தாய் என அப்பாவுக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று வயல்வெளியில் கட்டி வைக்கப்பட்டிருந்த கால்நடைக்கு தண்ணீர் வைப்பதற்காக அண்ணாமலை சென்று உள்ளார்.  இதனை அறிந்த ஏழுமலை, வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை எடுத்து அண்ணாமலை மீது மோதியதாக கூறப்படுறது. 

உழவு ஓட்டுவது போன்று, அவர் மீது ஏற்றி  இறக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் உயிர் பிரிந்ததை உறுதிசெய்து கொண்ட பின் அங்கிருந்து ஏழுமலை தப்பியோடியுள்ளார். பெற்ற மகனே தந்தையின் மீது டிராக்டரை ஏற்றிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அணைக்கட்டு போலீசார் அண்ணாமலையின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com