மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
Published on

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி ஒருவர் உயிரிழந்தார். 

வளவம்பட்டியைச் சேர்ந்த பழனிவேல் இன்று காலை வயலை உழுதுள்ளார். அப்போது, அறுந்து கிடந்த மின்வயரில் உழவு இயந்திரம் சிக்கி அதனால் பழனிவேல் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அதில் தூக்கி வீசப்பட்ட பழனிவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதற்கிடையில், அறுந்துகிடந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் விவசாயி உயிரிழக்கவில்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்வயரில் உழவு இயந்திரம் சிக்கியதாலேயே விவசாயி பழனிவேல் உயிரிழந்ததாகவும் மின்வாரியம் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com