கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி - கணவர், மகன் இருவரும் தற்கொலை

கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி - கணவர், மகன் இருவரும் தற்கொலை
கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி - கணவர், மகன் இருவரும் தற்கொலை
Published on

திருக்கழுக்குன்றம் பகுதியில் பொங்கல் பண்டிகையின் போது தந்தை மற்றும் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள முத்திகை நல்லான்குப்பம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (45). இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகன்கள் வெற்றிவேல் (14) மற்றும் தேவா (11). திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் வெற்றிவேல் 9ஆம் வகுப்பும், தேவா 5ஆம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று இரவு பாலகிருஷ்ணன் அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சுந்தரி கோபத்தில் அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து இளைய மகன் தேவா, தனது தாயிடம் ஓடி வந்து தந்தை மற்றும் அண்ணன் இருவரும் வீட்டில் தூக்கிட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்து ஓடி வந்து சுந்தரி பார்த்தபோது, அக்கம் பக்கத்தினர் தந்தை மற்றும் மகன் இருவரையும் மீட்டு திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.

தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையின் போது, தந்தை, மகன் இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com