ஈரோடு: உரிய அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது

ஈரோட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசுகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
இளைஞர் கைது
இளைஞர் கைதுpt desk
Published on

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு காசிபாளையம் அடுத்துள்ள முத்தம்பாளையத்தில் கௌதம் (25) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வரும் கௌதம், தனது வீட்டில் அனுமதியில்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக தாலுகா காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள்pt desk

இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் வீட்டில் பட்டாசுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கௌதமிடம் நடத்திய விசாரணையில், சிவகாசியில் இருந்து ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இளைஞர் கைது
தீபாவளி | தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு!

இந்நிலையில், கௌதமை கைது செய்த காவல்துறையினர் அவரது வீட்டில் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com