ஈரோடு: பிறந்த நாளை கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிய சகோதரிகளுக்கு நேர்ந்த விபரீதம்

ஈரோடு: பிறந்த நாளை கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிய சகோதரிகளுக்கு நேர்ந்த விபரீதம்
ஈரோடு: பிறந்த நாளை கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிய சகோதரிகளுக்கு நேர்ந்த விபரீதம்
Published on

ஈரோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்தோடு எலவமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ். பெட்ரோல் பங்க்-ல் பணியாற்றி வரும் இவருக்கு நிஷா, ஷாலினி என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நிஷா, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திற்குச் சென்றிருந்தார்.

இதைத் தொடர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு தனது சகோதரி ஷாலினி மற்றும் உறவினரான 10-ம் வகுப்பு படித்து வரும் சுபாஷ் ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பவானி லட்சுமி நகர் வளைவு அருகே வந்தபோது சேலத்தில் இருந்து கொச்சினுக்கு சென்ற லாரி இருச்சக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது.

இதில் சகோதரிகள் நிஷா மற்றும் ஷாலினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மாணவன் சுபாஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிறந்த நாளன்று தனது சகோதரியுடன், பள்ளி மாணவி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com