திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு: நாட்டுப்புறக் கலைப்பயிற்சி

திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு: நாட்டுப்புறக் கலைப்பயிற்சி
திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு: நாட்டுப்புறக் கலைப்பயிற்சி
Published on

திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் விதமாக மதுரையில் அவர்களுக்கு நாட்டுப்புற கலைப்பயிற்சி அளிக்கப்பட்டது.


மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் திருநங்கைகளுக்கான நான்கு நாட்கள் நாட்டுப்புறக்கலைப்பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 25 திருநங்கைகள் பங்கேற்று நாட்டுப்புற கலைகளை பயின்றனர்.


ஸ்வஸ்தி என்ற அமைப்பு சமூகநலத்துறையுடன் இணைந்து இந்த பயிற்சியை அளித்தது. கரகாட்டம், ஒயிலாட்டம், பறையிசை போன்ற கலைகள் இவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. பொருளாதார பலம் பெறாததே திருநங்கைகளுக்கு பெரும் வாழ்வியல் போராட்டமாக உள்ள நிலையில், இந்த பயிற்சி தங்களுக்கு உதவும் என்று அதில் பங்கேற்ற திருநங்கைகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com