இடி தாக்கியதில் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின

இடி தாக்கியதில் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின
இடி தாக்கியதில் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின
Published on

சீர்காழி அருகே இடி தாக்கியதில் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளன. 

நாகை மாவட்டம் சீர்காழியில் இன்று அதிகாலை முதல், இடியுடன் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, சீர்காழி அருகே திருநன்றியூரில், இளங்கோவன் என்பவரது வீட்டின் தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதனால் இளங்கோவன் மற்றும் அருகில் இருந்த ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் இருந்த மின் மீட்டர், டி.வி. ரேடியோ உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின. இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அனைவரும் வெளியே ஓடிவந்தனர். அதிஷ்டவசமாக இரண்டு வீடுகளிலிலும் இருந்த யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. மழைக்காலங்களில் வானத்தில் இடி இடிக்கும் சத்தம் கேட்டால் தொலைக்காட்சி போன்ற மின்சாதனப் பொருட்களின் அருகில் நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com