திராவிடர் கழகக் கூட்டம் தள்ளி வைப்பு

திராவிடர் கழகக் கூட்டம் தள்ளி வைப்பு
திராவிடர் கழகக் கூட்டம் தள்ளி வைப்பு
Published on

இன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற இருந்த சிறப்புக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொண்டர்களும் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

ஆனால், நேற்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. நேற்று மாலை 6.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுயிருந்தது. இந்த அறிக்கை திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற இருந்த சிறப்புக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை முதல் கட்ட வெற்றி - அடுத்த நிலை என்ன என்ற தலைப்பில் இன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தலைமையில் நடைபெற இருந்த சிறப்புக்கூட்டம் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com