சால்வை, பூங்கொத்து வேண்டாம்: ஆளுநர் பன்வாரிலால்

சால்வை, பூங்கொத்து வேண்டாம்: ஆளுநர் பன்வாரிலால்
சால்வை, பூங்கொத்து வேண்டாம்: ஆளுநர் பன்வாரிலால்
Published on

விழாக்களில் பூங்கொத்து மற்றும் சால்வை பரிசளிப்பதை தவிர்க்குமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டுள்ளார். 

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு விழாக்களில் பங்கேற்கும் ஆளுநர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னை சந்திக்க வருபவர்கள் சால்வை, பூங்கொத்து வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை அனைவரும் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.    

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com