அமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் - சத்யபிரதா சாஹூ

அமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் - சத்யபிரதா சாஹூ
அமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் - சத்யபிரதா சாஹூ
Published on

தேர்தல் ஆணையத்திடமிருந்து மறு உத்தரவு வரும்வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல், தமிழக இடைத்தேர்தலுக்கு குக்கர் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைகால மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு அதிரடி தீர்ப்பளித்தது. அதில், அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உத்தரவிட்டது.

மேலும் அனைத்து அமமுக வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் அமமுக கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் நிச்சயம் ஏதேனும் ஒரு பொதுச்சின்னத்தை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அமமுக வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்படுவதாக இருந்தால், அந்தச் சின்னம் மற்ற வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படக்கூடாது. இதானல் அனைத்து சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்குவது தாமதமாகும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com