விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிக்கிறது!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது. இடைத்தேர்தலை புறக்கணிப்பது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி
பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமிpt web
Published on

எதிர்க்கட்சியான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் தற்போது தேமுதிகவும் புறக்கணித்துள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

இன்றைய காலகட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது. இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது.

பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு: ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

இன்றைய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றைக்கு கேள்விக் குறியக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர். எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com