முன்கள பணியாளர் கொரோனா தடுப்பூசியால் இறந்தாரா? - நீதிமன்றத்தில் முறையீடு

முன்கள பணியாளர் கொரோனா தடுப்பூசியால் இறந்தாரா? - நீதிமன்றத்தில் முறையீடு
முன்கள பணியாளர் கொரோனா தடுப்பூசியால் இறந்தாரா? - நீதிமன்றத்தில் முறையீடு
Published on

கொரோனாவிற்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் முன்கள பணியாளரின் உடலை, மருத்துவ நிபுணர் குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சின்னம்ம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மனோகரன் புதூர் பேரூராட்சியில் தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளராக பணிபுரிந்து வந்தார். வெளியூர் செல்வதற்காக அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உறவினர்கள், முன்கள பணியாளரான மனோகரனுக்கு கொரோனா தடுப்பூசி போட்டதன் காரணமாகவே இறந்துள்ளார் எனக் கூறியதோடு, அவரது உடலை வாங்க மறுத்து முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஜனவரி 21ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், தொடர்ச்சியாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், ஜனவரி 30 ஆம் தேதி உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

ஆகவே, கொரோனாவிற்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் முன்களப் பணியாளரின் உடலை, மருத்துவ நிபுணர் குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்து, அவரது இறப்பிற்கான காரணத்தை கண்டறியவும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிடவேண்டும் எனவும் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டது. அதற்கு நீதிபதிகள் நாளை இந்த வழக்கை விசாரிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com