திருமழிசையில் புறநகர் பேருந்து நிலையம் - துணை முதல்வர் ஆலோசனை

திருமழிசையில் புறநகர் பேருந்து நிலையம் - துணை முதல்வர் ஆலோசனை

திருமழிசையில் புறநகர் பேருந்து நிலையம் - துணை முதல்வர் ஆலோசனை
Published on

சென்னையை அடுத்த திருமழிசையில் புறநகர் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னையின் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நகருக்கு வெளியே புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை சிஎம்டிஏ மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு வண்டலூரை அடுத்த கிலாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து கர்நாடக, ஆந்திரா மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு சென்னையை அடுத்த திருமழிசையில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் முதற்கட்ட பணிகள் குறித்து சிஎம்டிஏ அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புதிய புறநகர் பேருந்து நிலையத்தின் திட்டம் மற்றும் திட்ட வடிவமைப்பு குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com