“எழுதி தருவதை சொல்வதுதான் ஸ்டாலின் வேலை” - சிவி சண்முகம் 

“எழுதி தருவதை சொல்வதுதான் ஸ்டாலின் வேலை” - சிவி சண்முகம் 
“எழுதி தருவதை சொல்வதுதான் ஸ்டாலின் வேலை” - சிவி சண்முகம் 
Published on

யாராவது எழுதி தருவதை சொல்வதுதான் ஸ்டாலினுக்கு வேலை அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “வெளிநாட்டு பயணம் நல்ல ஆக்கப்பூர்வமான பயணம். ஒரு அரசுக்கு உள்நாட்டு முதலீடுகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீடுகளும் தேவை. நாம் அவர்களை நாடி சென்று தமிழகத்தில் நிலையை எடுத்து சொல்லி, படித்த மாணவர்கள் இருக்கிறார்கள், இந்தியாவில் அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்பதையெல்லாம் எடுத்துக்கூறினால்தான் அவர்கள் இங்கு முதலீடு செய்ய வாய்ப்பு உருவாகும். 

பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை கவர செயல்பட்டு வரும் முதலமைச்சரை பாராட்ட மனமில்லாமல் பொறாமையால் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருகிறார். யாராவது எழுதி தருவதை சொல்வதுதான் ஸ்டாலினுக்கு வேலை அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது” என சிவி சண்முகம் தெரிவித்தார். 

மேலும் “விரைவில் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளார். தீர்ப்புகளை தமிழில் மொழி மாற்றம் செய்வதற்கான சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு வருகிறது. 7 பேர் விடுதலையில் எதிர்க்கட்சியினர் நீலிக்கண்ணீர் வடிப்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை” எனக் குறிப்பிட்டார். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com