பள்ளி மாணவர்களுக்கு லீவு இல்லை; நேற்றைய அறிவிப்பு நிறுத்தி வைப்பு

பள்ளி மாணவர்களுக்கு லீவு இல்லை; நேற்றைய அறிவிப்பு நிறுத்தி வைப்பு
பள்ளி மாணவர்களுக்கு லீவு இல்லை; நேற்றைய அறிவிப்பு நிறுத்தி வைப்பு
Published on

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக நேற்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது.

அத்துடன் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தேனி, நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கொரோனா எதிரொலியால் அறிவிக்கப்பட்ட எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கான விடுமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தேனி, நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5-ஆம் வகுப்பு வரை அறிவிக்கப்பட்ட விடுமுறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com