நாகை: மின்வாரியத்திற்கே ஷாக் கொடுத்த மர்ம நபர்கள் - ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகள் திருட்டு

நாகையில் மின்வாரியத்திற்கே ஷாக் கொடுத்த அடையாளம் தெரியாத நபர்கள்; புதிய மின்மாற்றியை உடைத்து 2 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காப்பர் கம்பிகள் திருட்டு
காப்பர் கம்பிகள் திருட்டுpt desk
Published on

செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மின் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வந்த நிலையில் பட்டமங்கலம் ஊராட்சி சார்பில் புதிய மின்மாற்றி அமைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் பேரில் இலுப்பூர் சத்திரம் அருகே புதிய மின்மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Police station
Police stationpt desk

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே மின்வாரியத்தினர், புதிய மின்மாற்றியை இறக்கி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதனை கவனித்த மர்ம நபர்கள் அந்த மின்மாற்றியை உடைத்து அதன் உட்புறம் இருந்த சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடிச் சென்றனர். மேலும் அதில் இருந்த 150 லிட்டர் ஆயிலையும் கீழே கொட்டிச் சென்றுள்ளனர்.

காப்பர் கம்பிகள் திருட்டு
திருப்பூர்: இளைஞரை கடத்தி பணம் பறிக்க முயற்சி - 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது

இது குறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் மின்சார வாரிய இளநிலை மின் பொறியாளர் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com