குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப் பட பிரார்த்திப்போம் - பொன்.ராதாகிருஷ்ணன்

குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப் பட பிரார்த்திப்போம் - பொன்.ராதாகிருஷ்ணன்
குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப் பட பிரார்த்திப்போம் - பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப் பட பிரார்த்திப்போம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்த சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 19 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்ட மீட்பு நடைவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மீட்பு பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் இணந்துள்ளனர்.

குழந்தை சுர்ஜித் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தன்னுடைய ட்வீட்டரில், “லட்சக்கணக்கான மக்களின் பிரார்த்தனையின் பலனாகவும், பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு மற்றும்  தொடர்ந்து மீட்புப் பணியில்   ஈடுபட்டு வரும் வீரர்களின் முயற்சியால் குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப் படவேண்டும். பிரார்த்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com