ஓசூர் விமான சேவைக் கோரி முதல்வர் எடப்பாடி கடிதம்

ஓசூர் விமான சேவைக் கோரி முதல்வர் எடப்பாடி கடிதம்
ஓசூர் விமான சேவைக் கோரி முதல்வர் எடப்பாடி கடிதம்
Published on

சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சேலத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டதால் ஏராளமானோர் பயன்பெற்று வருவதாக கூறி முதல்வர் அதற்காக நன்றி தெரிவித்துள்ளார். தொழில் நகரமான ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதே போல நெய்வேலியிலும் விமான சேவையை விரைந்து தொடங்கவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உதான் திட்டத்தின் 2வது கட்டத்தில் ராமநாதபுரம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அங்கும் விமான நிலைய பணிகளை விரைவுபடுத்துமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் புனிதத்தலமான ராமேஸ்வரத்திற்கு நாடெங்கிலுமிருந்து வரும் பக்தர்கள் பயனடைவர் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com