மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. அந்த மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சச்சிதானந்தமாக இருந்து வந்த அருணகிரிநாதர் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ''ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com