தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் - முதல்வர்

தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் - முதல்வர்
தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் - முதல்வர்
Published on

தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கால் அன்றாட கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.

இதனிடையே பல்வேறு தரப்பு கூலித்தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இ.எஸ்.ஐ கீழ் பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் கொரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்குவதற்காக ரூ. 2,177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த நிவாரணம் மே மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com