ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர்: மேம்பால கம்பியில் மோதி பலி

ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர்: மேம்பால கம்பியில் மோதி பலி
ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர்: மேம்பால கம்பியில் மோதி பலி
Published on

சென்னை டிடிகே ‌சாலை மேம்பாலத்தில் உள்ள இரும்பு கம்பியின் மீது பைக் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருவல்லிக்கேணியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் ராகுல். இவர் ஹெல்மெட் அணியாமல், சென்னை டிடிகே சாலை ஆ.ர்.கே மேம்பாலம் வழியாக நேற்று இரவு 11 மணி அளவில் காமராஜர் சாலை நோக்கி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வேகத்தில் தடுமாறிய அவர், பாலத்தில் உள்ள இரும்பு கம்பியின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த இராயப்பேட்டை காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிசார், ராகுலின் உடலை கைப்பற்றி இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்தால் ராகுல் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com