சென்னை: சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
சென்னை: சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
Published on

சென்னை குன்றத்தூர் அருகே சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் (37), விஜயபரணி (39), பரத்ராஜ் (27),.சாப்ட்வேர் இன்ஜினியர்களான இவர்கள் மூன்று பேரும், இன்று தெலங்கானாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பரத்ராஜ் ஓட்டிய நிலையில் பின்னால் கார்த்திக், விஜயபரணி ஆகிய இருவரும் அமர்ந்து சென்றனர்.

அப்போது வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் குன்றத்தூர் பகுதி அருகே வரும்போது சாலையின் ஓரம் நின்றிருந்த கண்டெய்னர் மீது கார் வேகமாக மோதி நொறுங்கியது. காரின் பின்புறம் அமர்ந்திருந்த கார்த்திக் மற்றும் விஜயபரணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரை ஓட்டிவந்த பரத்ராஜ் காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரின் கதவுகளை கடப்பாரையால் உடைத்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com