திடீரென கேட்ட அழுகுரல்.. குப்பைத் தொட்டியில் கிடந்த பிறந்து ஒருமாதமே ஆன பெண் குழந்தை! நடந்தது என்ன?

ஒருமாத பெண் குழந்தை குப்பைத் தொட்டியில் கண்டெடுப்பு... பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Female Baby
Female Babypt desk
Published on

சென்னை நந்தனம் சி.ஐ.டி நகர் 4 வது பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் இரவு 8 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அருகிலுள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் கலியபெருமாள் என்பவர் சென்று பார்த்துள்ளார். அப்போது குப்பைத் தொட்டியில் ஒருமாத பெண் குழந்தை கிடந்தது தெரியவந்தது.

Garbage bin
Garbage binpt desk

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது, ஒரு வயதான பெண்ணும் அவருடம் இளம்பெண்ணும் வந்து குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது.

Female Baby
பாலியல் அத்துமீறல்கள்... மாணவி சொன்ன யோசனை.. சினிமாவில் மாற்றம் வருமா? #Video

இதையடுத்து அவர்கள் யார் என்பது குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com