சென்னை: நகைக் கடைக்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள்!

ஆவடி அருகே நகைக் கடைக்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கிவிட்டு நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Police investigate
Police investigatept desk
Published on

செய்தியாளர்: நவீன் குமார்

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் காவல் எல்லைக்கு உட்பட்ட பிருந்தாவனம் அவன்யூ செந்தில் நகர் பகுதியில் ஜோதி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. சிறிய அளவிளான இந்த கடையில் நகை விற்பனை மற்றும் அடகு வியாபாரம் செய்து வரப்படுகிறது.

இந்நிலையில், இக்கடையில் நேற்று புகுந்த மர்ம கும்பல் கத்தி முனையில் கடை உரிமையாளர் ரமேஷ் குமாரிடம் நகைகளை கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் தர மறுக்கவே மர்ம கும்பல் அவரை கத்தியால் தாக்கி விட்டு கடைக்குள் இருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகளை அவர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகின்றது.

Police station
Police stationpt desk

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருமுல்லைவாயல் போலீசார், ரமேஷ் குமாரை மீட்டு சிகிச்சைக்காக அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை அடையாளம் கண்டு வருகின்றனர்.

Police investigate
கேரளா: ஆட்டோவில் சென்ற இளைஞரை கடத்திய கும்பல்; விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!

இதற்கு இடையே ரமேஷின் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் என பல்வேறு தரப்பினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆள் நடமாட்டம் மிக்க பிரதான பகுதியில் அரங்கேறிய கொள்ளச் சம்பவத்தால் கடை உரிமையாளர் நாடகமாடுகிறாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com