நகைகளை சென்னையிலேயே விற்றுவிட்டேன்: கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம்

நகைகளை சென்னையிலேயே விற்றுவிட்டேன்: கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம்
நகைகளை சென்னையிலேயே விற்றுவிட்டேன்: கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம்
Published on

ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராம், கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளை சென்னையிலேயே விற்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக ராஜஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கொளத்தூரில் முகேஷ்குமார் என்பவரின் நகைக்கடையிலிருந்து மூன்றரை கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. விசாரணையில், ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம், தினேஷ் சவுத்ரி உள்ளிட்டோர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பிடிக்கச் சென்ற போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்தார். 

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதியன்று ராஜ்கோட்டில் பதுங்கியிருந்த நாதுராமை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர். 3 நாட்கள் நடத்திய விசாரணையில், பெரியபாண்டியனை தான் சுடவில்லை எனவும், கொள்ளையடித்த நகைகளை சென்னையிலேயே விற்றுவிட்டதாகவும் நாதுராம் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். நாதுராம், தினேஷ் இருவரையும் விசாரணைக்கு எடுத்து சென்னை அழைத்து வர தனிப்படை காவல்துறையினர் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com