18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: இன்று மீண்டும் விசாரணை

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
Published on

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்தியநாராயணன் வழக்கை விசாரிக்கிறார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் கடந்த 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர். இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 3-ஆவது நீதிபதியாக விமலா பரிந்துரை செய்யப்பட்டார். அதனை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 3வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து 3-ஆவது நீதிபதி சத்தியநாராயணன் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணை செய்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com