”ஜெயிலுக்கு போகத்தான் இதை செய்தேன்” - சென்னையில் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது!

சென்னை அன்ணா நகர் மற்றும் அன்னை சத்யா நகர் ஆகிய இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியதாக பால என்ற பாலமுரளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Petrol bomb
Petrol bombpt desk
Published on

அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த பால என்ற பாலமுரளி, திருச்சியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அன்னை சத்யா நகர் பகுதிக்கு மீண்டும் வந்துள்ளார்.

இந்நிலையில், இவர், அன்ணா நகர் மற்றும் அன்னை சத்யா நகர் ஆகிய இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். இந்த குண்டு சுவற்றில் பட்டு கீழே விழுந்துள்ள நிலையில், நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து பால என்ற பாலமுரளியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், தனக்கு வெளியே இருக்க பிடிக்கவில்லை எனவும், தான் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதால் அன்னை சந்யா நகரில் உள்ள போலீஸ் பூத் மற்றும் மதுபானக் கடையை நோக்கி வீசியதாக குண்டுகளை வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Petrol bomb
கர்நாடகா| மண்சரிவில் சிக்கிய தமிழக லாரி ஓட்டுநர் உடல்மீட்பு; அங்கோலாவுக்கு புறப்பட்ட குடும்பத்தினர்!

இவர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில், அண்ணா நகர் போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com