சென்னை | திருமணத்திற்கு சம்மதிக்காத மகள் - விரக்தியில் விபரீத முடிவெடுத்த தாய், தந்தை!

சென்னை பம்மலில் திருமணத்திற்கு மகள் சம்மதிக்காததால் தாய், தந்தை விபரீத முடிவெடுத்த சம்பவபம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபரீத முடிவெடுத்த தாய் தந்தை
விபரீத முடிவெடுத்த தாய் தந்தைpt desk
Published on

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், மூங்கில் ஏரி, சுவாமிநாத நகரைச் சேர்ந்தவர் செல்லதுரை (62). இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஈஸ்வரி (52). இருவரும் விபரீத முடிவெடுத்து உயிரிழந்தனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், சங்கர் நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Death
DeathFile Photo

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர்களது மகள் கீர்த்தனா (30), அயர்லாந்தில் படித்துக் கொண்டே வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் வீட்டிற்கு வந்த அவரிடம் பலமுறை திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளனர்.

விபரீத முடிவெடுத்த தாய் தந்தை
ஃபார்முலா 4 கார் பந்தயம் | பாதுகாப்பு பணியின்போது திடீர் நெஞ்சுவலி - காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு

ஆனால், அவர் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்காமல் இருந்துள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த கணவன் - மனைவி இருவரும் விபரீத முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. சங்கர் நகர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபரீத முடிவெடுத்த தாய் தந்தை
’மன்னிக்கவும் அம்மா.. மிஸ் யூ’| தாயைக்கொன்று ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்..குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்!

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com