சென்னை: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு

சென்னையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
roof collapsed
roof collapsed pt desk
Published on

செய்தியாளர்: ஆனந்தன்

செங்கல்பட்டை சேர்ந்தவர் செல்லம்மாள் (62). இவர் சென்னை சைதாப்பேட்டை துரைசாமி கார்டன் இரண்டாவது தெருவில் வசிக்கும் தனது சகோதரியை பார்ப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டின் மேற்கூரை பெயர்ந்;து மூதாட்டி மீது விழுந்துள்ளது.

roof collapsed
roof collapsed pt desk
roof collapsed
மதுபோதையில் 2 உயிர்களை பறித்த சிறுவன்!’300 வார்தையில் கட்டுரை எழுதவும்’என ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை காவல்நிலைய போலீசார், மூதாட்டியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com